“அன்பார்ந்த பெற்றோர்களே ஓர் வேண்டுகோள்” என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. போலியோ இல்லாச் சமுதாயம் தொடர, இன்றைய போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து வழங்குங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.