
இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இழந்தது. 293 ரன்கள் இலக்கை நோக்கி பதில்வீச்சில் இறங்கிய பாகிஸ்தான், தொடக்க வீரர்களின் கடும் வீழ்ச்சியால் 208 ரன்களுக்குள் ஒட்டுமொத்தமாக சுருண்டது. ஃபஹீம் அஷ்ரஃப் 73 ரன்களும், தய்யப் தாஹிர் 51 ரன்களும் எடுத்து சிறப்பாக விளையாடினாலும் வெற்றிக்கு வழிவகுக்கவில்லை. தற்போது, மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 5ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது.
ABRAR AHMED BOWLED SHUBMAN GILL. pic.twitter.com/xDMfy86048
— عبدالرشید (@AbdurRasheed369) February 25, 2025
— urooj Jawed
(@cricketfan95989) April 2, 2025
இதற்கிடையில் முன்னதாக சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய வீரர் சுப்மன் கில்லை பந்துவீச்சில் அவுட் செய்த பின், அப்ரார் அஹமத் கில்லை வழியனுப்பி வைக்கும் வகையில் கைகளை கட்டி நின்று கொண்டு அவரை முறைத்துப் பார்த்தார். இது சமூக வலைதளங்களில் விமர்சிக்க பட்டது. இந்நிலையில் தன நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் பெண் ரசிகை ஒருவர் அப்ராரிடம் நேரடியாக மோதியுள்ளார். அவர், முந்தைய போட்டியில் இந்திய வீரரிடம் காட்டிய அப்ராரின் செயலுக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.