தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயில் ஆக மாற்று இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு புறப்படும். திருச்சிக்கு 1.05 மணிக்கு, மதுரைக்கு 3.20 மணிக்கு, நெல்லைக்கு 6.05 மணிக்கு சென்றடையும். அதனைப் போலவே கொல்லத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மறுநாள் காலை 6.05 மணிக்கு வந்தடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.