
சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது இணையத்தை ஊடுருவி பரவி வருகிறது. விமான நிலையத்தில் குடியேற்றப் பிரிவில், ஒரு பெண்ணின் முகத்தை பாஸ்போர்ட் சோதனை இயந்திரம் அடையாளம் காணாததால், அதிகாரிகள் அந்த பெண்ணிடம் மேக்கப்பை துடைக்க கூறினர்.
வீடியோவில், அந்த பெண் வெட்கத்துடனும் குழப்பத்துடனும், தனது முகத்தில் இருந்த ஃபவுண்டேஷன், ஐலைனர், லிப் டின்ட், காண்டூர் போன்ற ஒப்பனைகளை சுத்தமாக துடைப்பதைக் காணலாம்.
View this post on Instagram
அருகில் இருந்த ஒரு அதிகாரி கடுமையாக, “உன் முகம் பாஸ்போர்ட் புகைப்படத்தோடு பொருந்தும் வரை மேக்கப்பை முழுவதுமாக துடை” என்று கூறுகிறார். விமான நிலையத்தில் இருக்கும் பயணிகள் முன்பாக நடந்த இந்த காட்சி, அந்தப் பெண்ணுக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ இணையத்தில் பரவத் தொடங்கியதும், பலரும் நகைச்சுவையாகவும், சிலர் அனுதாபத்துடனும் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர். “இயந்திரம் கூட அடையாளம் காண முடியாத அளவுக்கு மேக்கப் போட்டிருக்காங்க,” என்றொரு பயனர் கூற, மற்றொருவர், “அந்த பெண் ஏற்கனவே மன வேதனையில் இருந்தார், அதிகாரி இனிதாக பேசக்கூட முடியாதா?” என்று விமர்சித்துள்ளார்.