தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூரில் செல்வராஜ்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் ஓட்டுனராக வேலை பார்க்கிறார். கடந்த ஒன்பதாம் தேதி இரவு தென்காசியில் இருந்து சென்னை செல்வதற்காக செல்வராஜ் சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வந்த மர்ம நபர்கள் செல்வராஜை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் படுகாயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று அதிகாலை 2 மணிக்கு செல்வராஜை அரிவாளால் வெட்டிய கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்ததில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. செல்வராஜூம் கண்ணனும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் கண்ணன் செல்வராஜை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. கண்ணன் மீது ஏற்கனவே பத்துக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கண்ணனின் செல்போனை சோதனை செய்தபோது அவர் பல்வேறு பெண்களுடன் பேசி வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.