உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில், கணவன்-மனைவிக்கிடையேயான தகராறுக்குப் பிறகு, நான்காவது மாடியில் இருந்து குதிக்க முயன்ற மனைவியை கணவர் காப்பாற்றிய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ரிஷிகேஷ் நகரின் அம்பாக் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், இந்த மன அழுத்தமான சூழ்நிலைக்கு காரணமானது.

தகராறுக்குப் பிறகு, மனைவி பால்கனிக்கு ஓடி, உடனடியாக குதிக்க முயன்றார். ஆனால், அதை கவனித்த கணவர், அவளது இரு கைகளையும்  பிடித்து, கீழே விழாமல் தடுத்தார். குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனே உதவியதால், அந்தப் பெண் உயிர்தப்பினார். சம்பவம் பகலில் நடந்ததால், காலனி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிகழ்வை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால், அது வைரலாகியுள்ளது. சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகியிருந்தாலும், இதுவரை எந்தவொரு  புகாரும் அளிக்கப்படவில்லை என்று காவல் துறை இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.  இந்த சம்பவம், குடும்பத்திலுள்ள உணர்ச்சி நிலைகள் எப்போது வேண்டுமானாலும் அபாய நிலைக்கு செல்லும் என்பதற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.