
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் கொல்லப்பட்டதால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகங்களை குறிவைத்து அழித்தது.
இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் அதனை இந்தியா தடுத்து நிறுத்தியதோடு பாகிஸ்தானுக்கு பதிலடியும் கொடுத்தது. கிட்டத்தட்ட 3 நாட்களாக நீடித்த இந்த போர் அதன் பிறகு முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூரின் போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லையோர கிராமமான டாரா வாலியில் ஒருவர் அங்கும் இங்குமாக ஒரு சிறுவன் சென்று கொண்டிருந்தார். அதாவது அவர்களது விவசாய நிலத்தில் ராணுவத்தினர் தங்கி இருந்தனர்.
இவர்களுக்காக 10 வயது ஷ்ரவன் சிங் என்ற அந்த சிறுவன் தண்ணீர், பால், ஐஸ்கிரீம் மற்றும் லஸ்ஸி ஆகியவற்றை வழங்கினார். அந்த சிறுவன் பயமின்றி ராணுவத்தினருக்காக செய்த உதவிக்காக அந்த சிறுவனுக்கு பரிசுகள் வழங்கி ராணுவம் கௌரவித்தது. மேலும் அந்த சிறுவன் தான் பெரியவனாக வளர்ந்ததும் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்துள்ளான்.