சத்தீஸ்கர் மாநிலம் பலோட் பகுதியில் கடந்த மார்ச் 22ஆம் தேதி ஆசிரியை பர்கா வாஸ்னிக் என்ற பெண் சாலை விபத்தில் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், 67 நாட்களுக்குப் பிறகு அந்த மரணம் ஒரு  திட்டமிட்ட கொலை என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது  மொஹ்லா பிளாக்கின் ஷெர்பார் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த பர்கா, பியூனுடன் வீடு திரும்பும் போது, ஹிட்காசா பகுதியில் மோட்டார் வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால் இது விபத்துஅல்ல, அவரை அவரது கணவர் ஷீஷ்பால் வாஸ்னிக் திட்டமிட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

சம்பவ நாளில், பர்கா ஸ்கூட்டியில் புறப்பட்டிருந்த வேளையில், கணவர் ஷீஷ்பால் தனது நண்பர் யாஹுதீனுடன் இணைந்து, ஒரு வெள்ளை நிற பொலேரோ வாகனத்தில் வந்து மோதினார். இந்த விபத்துக்கு பிறகு பர்கா இன்னும் உயிரோடு இருப்பதை உணர்ந்த அவர், இரும்பு கம்பியால் பலமுறை தாக்கி கொலை செய்தார். இவர்களை போலீசார் கைது கைது செய்துள்ள நிலையில் போலீசார் கைதான இருவரிடமிருந்து பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும், கம்பியையும் பறிமுதல் செய்துள்ளனர். கணவரும் அவரது நண்பரும் தற்போது காவலில் அடைக்கப்பட்டு, நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையின் போதே, பர்காவுக்கும் அவரது கணவருக்கும் இடையே பல்வேறு பிரச்சனைகள் இருந்தது தெரியவந்தது. திருமணமானதிலிருந்து ஷீஷ்பால், பர்காவிடம் வரதட்சணை கோரியதுடன் அடிக்கடி குடும்ப தகராறுகளும் நடந்துள்ளன. விவாகரத்து மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. அதே நேரத்தில், பர்காவின் பெயரில் 8 லட்சம் கடன் எடுத்து, அதன் தவணை பர்காவின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. இந்தப் பிரச்சனைகளால் பர்கா குழந்தைகளுடன் துர்க்காவில் தனியாக வசித்து வந்ததாகவும், அவரது சகோதரி போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்த வழக்கை டல்லிராஜரா காவல் நிலைய பெண் இன்ஸ்பெக்டர் நர்மதா கோத்தாரி தீவிரமாக விசாரித்தார். சிசிடிவி காட்சிகள், பியூன் மற்றும் பள்ளி குழந்தைகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்கு முறைப்பாடு மாற்றப்பட்டது. மேலும், 60 ஆயிரம் ரூபாயை தனது நண்பருக்கு கொடுத்து கொலையில் உதவ வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், ஆசிரியை பர்காவின் மரணம் தற்போது கொடூரமான கணவர் சதியால் நிகழ்ந்த கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.