‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்துவின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இனி அவருக்கு பிண அந்த சீரியலில் யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் மறைவுக்குப் பிறகு இனி அந்தக் கதாபாத்திரத்தில் நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியானது.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்கிட்ட சேனல் தரப்பிலிருந்து அந்த கேரக்டர் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க.  ஆனா, இப்ப நான் சினிமாவில் பிஸியா இருக்கிறேன். சீரியலுக்கான நேரம் கொடுக்க முடியுமான்னு தெரியல. அது குறித்து நான் இன்னும் எந்த முடிவும் எடுக்கல என தெரிவித்துள்ளார்.