
மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட 15 வயது சிறுமி தபஸ்யா கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தபஸ்யா தலையில் பட்டுள்ளது. இதில் படுகாயம் அடைந்த தபஸ்யா உடனடியாக கோட்டக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் கோழிக்கோடுக்கு மாற்றப்பட்டார், ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் தபஸ்யாவின் குடும்பத்தினர் அவரை மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறியது மருத்துவமனையை சோகத்தில் ஆழ்த்தியது.