சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னம் நேற்று அதிபராக பதவி ஏற்று கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சுரேஷ் மேனன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னாள் அதிபரான ஹலீமா யாகூபின் பதவிக்காலம் 13ம் தேதி உடன் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று தர்மன் அதிபராக பதவியேற்றுக்கொண்டார். செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்ற சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட தர்மன் மொத்தமாக பதிவான 24.8 லட்சம் வாக்குகளில் 17.46 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.