
தெலுங்கானா மாநிலம் ராயர் வனச்சரவத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி குடிசைகள் அமைக்கப்பட்டது. அந்த குடிசைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் சென்றனர். அப்போது அதிகாரிகள் மீது பழங்குடியின மக்கள் மிளகாய் பொடி தூவி, கம்புகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசார் வனத்துறை அதிகாரிகளையும் பழங்குடியினரையும் சமாதானப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.