சென்னையில் உள்ளவர்களுக்கும், வெளியூரில் இருந்து வரும் பயணிகளுக்கும், வேலைக்கு செல்வதற்கும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களுக்கும் மெட்ரோ ரயில் பயணம் நம்பிக்கையான பயணமாக உள்ளது..மேலும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகளும் மெட்ரோ ரயில் நிர்வாகம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 42 ரயில்கள் இரண்டு வழித்தடங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் 15 பெண்கள் உட்பட 180 டிரைவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில்களில் பெட்டிகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டிகளும், 1 மகளிர் பெட்டியும் இருக்கும் நிலையில் அத்துடன் 2 பெட்டிகளை கூடுதலாக இணைத்து 6 பெட்டிகளாக அதிகரிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.