நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதன் பிறகு அதானி விவகாரம் பற்றி பேசுவதற்கு பாஜகவினர் பயப்படுவதாக காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதானி விவகாரம் பற்றி பயப்படுவதற்கோ, மறைப்பதற்கோ ஒன்றுமே இல்லை என்று கூறியுள்ளார். அதன் பிறகு 2024-ஆம் ஆண்டு வருகின்ற  நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் பாஜகவிற்கு போட்டி இருப்பதாக நினைக்கவில்லை. மேலும் மொத்த நாடும் பிரதமர் மோடியை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டதாக கூறினார்.