ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது இதில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொகுதியில் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிப்.19, 20 ஆகிய தேதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.