தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அதன் பிறகு நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக வெற்றி பெறவில்லை. கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படமும் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இதனால் தற்போது எப்படியாவது வெற்றியை கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன் லால், தமன்னா போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஜெய்லர் திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதம் தான் ரிலீஸ் ஆகும் என்று புது தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸ் ஆவதால் ஜெய்லர் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் ரஜினியின் முடிவு சரியானது தான் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.