நம்முடைய வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லபிராணிகள் இறந்தால், அதை தோட்டத்திலோ (அ) மனிதர்களை புதைக்கும் மயானத்திலோ தான் புதைப்போம். இப்போது தென்னிந்தியாவிலே முதல் முறையாக கோவையில் இறந்துபோன வீட்டு செல்லப்பிராணிகளின் உடல்களை தகனம் செய்ய தனி மின் மயானமானது அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மனித உடலை போன்று வீட்டு செல்லபிராணிகளான பூனைகள், நாய்கள் உள்ளிட்ட இறந்துபோன விலங்கினங்களின் உடல்களை தகனம் செய்ய தன்னார்வ அமைப்பினர் இணைந்து கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் மின் மயானத்தை நிறுவி இருக்கின்றனர்.