தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் பிரபலமான நடிகையாக இருந்தவர் பிரீத்தா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் என்று அடையாளத்தோடு சினிமாவுக்குள் நுழைந்தார். கடந்த 1998-ம் ஆண்டு வெளியான ருக்மணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ப்ரீத்தா அறிமுகமானார். அதன்பிறகு பல திரைப்படங்களில் நடித்த பிரீத்தா கடந்த 2002-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான படத்தில் கடைசியாக நடித்தார்.

கடந்த 2002-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஹரியை நடிகை ப்ரீத்தா திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது 3 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரீத்தா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது வளையல்கள் அருகில் என்று பிரீத்தா ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். நடிகை ப்ரீத்தா வளையல்களுக்காகவே தனி கபோர்ட் ஒன்றினை வைத்துள்ளார். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Pritha Hari (@prithahari_15)