
ராஜஸ்தான் மாநிலம் பிவாடி மாவட்டத்தில் உள்ள சுஹர்பூர் கிராமத்தில், ஒரு திருமண விழாவில் பயன்படுத்தப்பட்ட ரூ.14.50 லட்சம் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலை, திருமணம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவைச் சேர்ந்த சாத் கான் என்ற இளைஞர், திருமண நிகழ்ச்சிகளில் மணமகனுக்கு நோட்டு மாலை அணிவிக்கும் பணியை மேற்கொள்கிறார். இதற்காக அவர் தனியாக ரூ.8,000 முதல் ரூ.10,000 வரை வசூலிக்கின்றார்.
शादी में दूल्हे को पहनाई गई 14 लाख 50 हजार की नोटों की माला, हथियार की नोक पर बदमाशों ने लूटी
Rajasthan के भिवाड़ी में शादी समारोह में दूल्हे को पहनाई गई 14 लाख 50 हजार रुपए की नोटों की माला हथियारबंद बदमाशों ने लूट ली. हरियाणा से किराए पर मंगवाई गई इस माला को युवक बाइक पर वापस… pic.twitter.com/a8hH52hwp4
— AajTak (@aajtak) June 4, 2025
ஜூன் 1ஆம் தேதி, ஹரியானாவின் கிஷன்கர்பாஸைச் சேர்ந்த சம்சுதீன், தனது குடும்பத்துடன் சுஹர்பூர் கிராமத்தில் நடந்த ஆமிர் என்ற இளைஞரின் திருமண விழாவில் கலந்து கொண்டார். விழாவிற்காக ரூ.14.50 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலை வாடகைக்கு எடுக்கப்பட்டு, அதை சாத் கான் கொண்டு வந்து மணமகனுக்கு அணிவித்தார்.
சடங்கு முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சாத் கானின் பைக்கை, மர்ம நபர்கள் கிரெட்டா காரில் மோதினர். பின்னர், துப்பாக்கி முனையில் அவர் எடுத்துச் சென்ற ரூபாய் மாலையை பறித்து, காரில் தப்பிச் சென்றனர்.
இந்த திடீர் சம்பவத்தில், சாத் கான் தலையில் காயமடைந்ததாகவும், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிவாடி மாவட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகள், அதுல் சாஹு (கூடுதல் எஸ்.பி), டிஎஸ்பி கைலாஷ் சவுத்ரி மற்றும் திஜாரா டிஎஸ்பி சிவராஜ் சிங் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
இது குறித்து பிவாடி டிஎஸ்பி கைலாஷ் சவுத்ரி கூறியதாவது: “புகார்தாரரின் அளித்த தகவல்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்களைக் கண்டறிய சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
விரைவில் கொள்ளை தொடர்பான அனைத்து விவரங்களும் வெளிவரும்” எனத் தெரிவித்தார். இந்த சம்பவம் திருமண விழாக்களில் பணம் பாதுகாப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.