
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாத்தின் காரணமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் 38 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி, சேலம், நீலகிரி, கோவை, வேலூர், மதுரை, கடலூர், திருப்பூர், தருமபுரி, சென்னை, விழுப்புரம், தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், காஞ்சிபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 38 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.