பழம்பெரும் தெலுங்கு நடிகர் என்டி ராமராவ். இவருடைய ஐந்தாவது மகன் மோகன கிருஷ்ணாவின் மகன் தாரக ரத்னா இன்று மரணம் அடைந்தார். தாரக ரத்னா தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி குப்பம் பகுதியில் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாரக ரத்னா இன்று மரணம் அடைந்தார். கடந்த 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த தாரக ரத்னா 39 வயதில் இன்று மரணமடைந்திருப்பது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நந்தமுரி தாரக ரத்னாவின் மரணத்துக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.