டெல்லி துவாரகா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்திலிருந்து தப்பிக்க யாஷ் யாதவ் என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாடியில் இருந்து கீழே குதித்தார்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகள் மற்றும் அவர்களின் தந்தை யாஷ் யாதவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.