
உலகின் மிக ஆபத்தான பாம்புகளில் ஒன்றான கிங் கோப்ரா, 45 நிமிடங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நியூரோ டாக்ஸின் விஷத்தை செலுத்தும் சக்தி கொண்டது. ஒருவர் கிங் கோப்ராவை கட்டிப்பிடிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், இரண்டு நபர்கள் காட்டில் அமர்ந்திருக்க, அதில் ஒருவர் எளிதாக அந்த பெரிய கோப்ராவை தூக்கி குழந்தையை போல வைத்திருப்பதைக் காணலாம். பாம்பு எந்த விதம் அசைவும் இல்லாமல் அமைதியாக இருக்க, அருகிலிருந்த மற்ற நபர் அதிர்ச்சியில் மூழ்குகிறார்.
இந்த வீடியோ @wildcharlesshow என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு, 10,000க்கும் அதிகமான லைக்குகள் மற்றும் பல்வேறு கருத்துக்களை பெற்றுள்ளது. சிலர் இதை மிகுந்த தைரியமான செயல் என பாராட்டியிருப்பதுடன், பலர் இதை வெறும் பொறுப்பற்ற சாகசமாக விமர்சித்துள்ளனர். ஒரு பயனாளர் “உங்களுக்கு பயமா இல்லையா?” எனக் கேட்க, மற்றொருவர் “நீங்கள் ரொம்பவே துணிச்சலானவர்” என புகழ்ந்துள்ளார். மேலும், பலர் இந்த பாம்பு முழுமையாக விஷம் கொண்டது என்பதை உறுதிப்படுத்தியதுடன், “Diaz என்ற நபர் இந்த பாம்புடன் பல ஆண்டுகளாக பணியாற்றுகிறவர். இது சாதாரண நபர்கள் முயற்சி செய்யக்கூடிய செயல் அல்ல” என எச்சரிக்கையோடு பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram