உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த புதன்கிழமை, உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபரின் படுக்கையில் ஒரு கிங் கோப்ரா பாம்பு ஏறி வருவதை அவர் காண்கிறார். ஆனால் அதனை பார்த்தும் அந்த நபர் அமைதியாக இருந்தார். அதைக் காணொளியாக தனது மொபைலில் பதிவுசெய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் @insidehistory பக்கத்தில் வெளியிடப்பட்டவுடன் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், உலகின் மிக நீளமான விஷப்பாம்பு என அழைக்கப்படும் கிங் கோப்ரா, அந்த வீட்டில் அமைதியாக நுழைந்து, தரையில் ஊர்ந்து சென்றபின், படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நபரின் மீது ஏறி, பின்னர் அறையின் ஓரமாகச் சென்றது. அதிர்ச்சியான விஷயமெனினும், அந்த பாம்பு அந்த நபருக்கு எந்தத் தீங்கும் ஏற்படுத்தவில்லை.

இது, கிங் கோப்ராவின் மிக அரிதான ஒரு செயல் என்பதைக் காட்டுகிறது. மிக விஷமுள்ள பாம்பு என்றாலும், கிங் கோப்ரா மனிதர்களை பெரும்பாலும் தாக்குவதில்லை. அதுவே மிரண்டபோது அல்லது சிக்கிக்கொண்டு தவிக்கும்போது மட்டுமே தாக்குகிறது என வலைப்பக்கத்தின் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியும் வியப்பும் தெரிவித்துள்ளனர். ஒருவர், “எப்படி இப்படி அமைதியாக இருக்க முடிந்தது?” என கேட்டிருக்க, மற்றொருவர், “இந்த வீடியோ பார்த்த உடனே என் அறையிலிருந்து ஓடிவந்தேன்” என பதிவிட்டுள்ளார். “மும்பை பஸ்களில் பயணம் செய்த அனுபவமா இது?” என ஒரு நகைச்சுவைப் பேச்சும் பதிவிடப்பட்டுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Inside History (@insidehistory)

 

கிங் கோப்ரா பொதுவாக இந்தியா மற்றும் தென் ஆசிய காடுகளில் காணப்படுகிறது. இது 18 அடி வரை நீளமாக வளரக்கூடிய பாம்பு. ஆபத்தாக இருப்பதாக நினைத்தால், இது தனது உடலின் மூன்றில் ஒரு பகுதியை தூக்கி, நாக்கை விரிக்கக் கூடிய தன்மை உடையது. இந்த வீடியோ, பாம்புகள் பற்றிய பொது எண்ணங்களை மாற்றியமைக்கும் வகையில் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது.