நேற்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82)   மாரடைப்பால் காலமானார்.  ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இறுதிச் சடங்கின்போது 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குருவான பங்காரு அடிகளார் மறைவுக்கு அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் இரங்கல்தெரிவித்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், சமய பீடத்தைச் சமுதாய பீடமாய் மாற்றியவர்.

அடித்தட்டு மக்களுக்கு அடைத்துக் கிடந்த ஆன்மிகக் கதவுகளை எளியவர்க்கும் மகளிருக்கும் திறந்துவிட்டவர், இறுகிக் கிடந்த ஆன்மிக முடிச்சுகளைத் தளர்த்தியவர் மற்றும் அறுத்தவர், சமயப் பொதுவுடைமையாளர் பங்காரு அடிகளார் மறைவால் துயரமுறும் அத்துணை இதயங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். பீடம் கண்டவரின் பீடு புகழ் நீடு நிலவட்டும் என குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.