
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆமத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருகே இருக்கும் காலி இடத்தில் பெண் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது பிறந்த இரண்டு நாட்களை குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. குழந்தையின் தாய் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. அவர் கல்லூரி படித்து வருகிறார்.
திருமணமாகாமல் சிறுமிக்கு குழந்தை பிறந்தது. சிறுமியிடம் குழந்தையின் தந்தை யார் என விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த 35 வயது என்பவர் சிறுமியுடன் நெருங்கி பழகியுள்ளார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமானார். குழந்தை பிறந்த பிறகு யாருக்கும் தெரியாமல் குழந்தையை வீசி சென்றது தெரிகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விவேக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.