போன்பே ஆப் மூலமாக நாம் எளிதில் பண பரிவர்த்தனையை வீட்டிலிருந்தே செய்ய முடியும். நம்முடைய செல்போனில் இருந்து மற்றவருக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.  இதன் மூலம் பணப்பரிமாற்றம் செய்வது பாதுகாப்பானதாகவும் உள்ளது. இந்நிலையில் போன் பே பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.

இதன்படி பரிவர்த்தனைகளை மிக சுலபமாக மேற்கொள்ளும் வசதியுடன் UPI லைட் அம்சம் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ரூ.200க்குள் பணம் செலுத்த PIN ஐ உள்ளிட வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே கிளிக்கில் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பணம் செலுத்துவதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்தலாம். இந்த வசதியை பெற உங்கள் போன் பே ஆப்பை அப்டேட் செய்ய வேண்டும்.