ஒவ்வொரு  மாநிலத்திலும் முதியோர்களுக்கு பென்ஷன் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சரியான மாநிலத்தில் முதியோர்களுக்கான பென்ஷன் தொகையாக 2750 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பென்ஷன் தொகை 9 முதல் 10 சதவீதம் உயர்த்தப்பட்டு மாதம் 3000 ரூபாய் வழங்கப்படும் என்று அம் மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பயனாளிகள் பயனடைவார்கள். மேலும் இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு திணை குவிண்டலுக்கு ஒன்றுக்கு 2200க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் செப்டம்பர் 25ஆம் தேதிக்கு பிறகு திணை பயிரை  விற்பனை செய்தவர்களுக்கு ரூபாய் 300 தனித் தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.