உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பனசங்கிலி கிராமத்தில் சகீல் என்ற 55 வயது நபர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபர். அவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 6 குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது மூத்த மகனுக்கு 17 வயது ஆகும் நிலையில் திருமணம் செய்து வைப்பதற்காக அவருக்கு ஒரு பெண் பார்த்துள்ளார்.

அதாவது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை தன்னுடைய மகனுக்கு அவர் பேசிய நிலையில் முதலில் அந்த பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை. இருப்பினும் அவர்களை சகீல் ஒரு வழியாக சம்மதிக்க வைத்து தன்னுடைய மகனுக்கு நிச்சயதார்த்தமும் செய்தார்.

நிச்சயதார்த்தம் முடிந்த சில தினங்களில் தன் தந்தையின் செல்போனை 17 வயது மகன் பார்த்த போது தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் அவர்  ஆபாசமாக பேசிய ஆடியோக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அந்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என கூறிவிட்டார்.

இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் திடீரென சகீல் தன் மகனுக்கு பேசி முடித்த பெண்ணை அவரே திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது பற்றி சகீலின் மனைவி சபானா செய்தியாளர்களிடம் கூறும்போது, என் கணவரும் அந்த பெண்ணும் நீண்ட நேரமாக வீடியோ காலில் பேசிய நிலையில் அவர்கள் ஒன்றாக இருப்பதை இருமுறை நான் பிடித்தேன். இது பற்றி கேட்டபோது அவர் என்னையும் என் மகனையும் அடித்த நிலையில் தற்போது அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு வீட்டிலிருந்த 17 கிராம் தங்கம் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் என்று கூறினார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.