சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா, வம்சம் சீரியல் மூலம் பிரபலமான நடிகை சந்தியா. இவர் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதன் பின் சன் டிவி-யில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற  சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

இந்நிலையில் இவர் தனக்கு எதனால் விவாகரத்து ஏற்பட்டது என்பதை முதல்முறையாக கூறியுள்ளார். நானும் முன்னாள் கணவரும் காரில் சென்றபோது விபத்து நடந்தது. உடனே நான் கீழே இறங்கி ஒருவருக்கு உதவினேன். இதை பார்த்த எனது கணவர், நீ என்ன அந்த ஆளோட பொண்டாட்டியா? என கேட்டார். இதுபோல் ஆயிரம் சம்பவங்கள், ஒருகட்டத்தில் விவாகரத்து செய்துவிட்டேன் என்றார்.