இளைஞர் ஒருவர்  பிறந்தநாளன்று பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் புல்தானா என்ற மாவட்டத்தில் சிகாலி அருகே கஜானன் நகரில் வசித்து வருபவர் சந்தோஷ் ஜக்டேல் . இவர் தன்னுடைய 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

இதனையடுத்து  , தனது பிறந்தநாளையொட்டி தனது நண்பர்கள் ஆரிப் கான் மற்றும் தீரஜ் பண்டிட்கர் ஆகியோருடன் வெளியே சென்றுள்ளார். அப்போது பாம்பை பிடித்து அதனை கையில் வைத்தபடி புகைப்படம் எடுக்குமாறு நண்பர்கள் வற்புறுத்தியுள்ளனர். பாம்புடன் புகைப்படம் எடுக்க முயன்றபோது பாம்பு கடித்து சந்தோஷ் பலியானார்.