நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்களில் அனல் காற்றும் வீசி வருகிறது. இப்படி வாட்டி எடுக்கும் வெப்பமும் அனல் காற்றும் மக்களை பெரும்  துயரில் தள்ளியுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர். இந்நிலையில்  மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒசர் வீரா பழங்குடியின கிராமத்தை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்றுவர வீட்டில் இருந்து சுமார் 7 கி.மீ வெயிலில் நடந்துள்ளார்.

இதையடுத்து அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் கர்ப்பிணியை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.