கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாராயமூட்டம் பகுதியில் வினோதினி என்ற 29 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பள்ளிக்கூடம் பாறாசாலை பகுதியில் அமைந்துள்ளது.

இவர் கடந்த 29ஆம் தேதி வகுப்பறையில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நாற்காலியில் அமர்ந்தார்.

ஆனால் சிறிது நேரத்தில் வினோதனி மயங்கி கீழே விழுந்த நிலையில் சக ஆசிரியர்கள் உடனடியாக வினோதினியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வினோதினி உயிரிழந்துவிட்டார்.

மேலும் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது