திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் குணா குகையை பார்க்காமல் செல்ல மாட்டார்கள். இந்த நிலையில் குணா குகைக்கு சுற்றுலா வந்த கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணிகளிடமிருந்து ஒரு குரங்கு 500 ரூபாய் நோட்டு கட்டை பிடுங்கி சென்றது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள் குரங்கிடமிருந்து பணத்தை மீட்க முயற்சி செய்தனர். அந்த குரங்கு ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றாக வீசியதால் அந்த பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துச் சென்றனர். நாளுக்கு நாள் குரங்குகளின் அட்டகாசம் அதிகரித்து செல்வதால் சுற்றுலா பயணிகள் வேதனையில் உள்ளனர்.