
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டை இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் அவர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் கூட நடத்துகிறார்கள். இலங்கை சிறையில் 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தவித்து வரும் நிலையில் அவர்களை விடுவிக்க வலியுறுத்தி அவ்வப்போது தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுகிறது. அதன் பிறகு மத்திய அரசுக்கு தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினும் தொடர்ந்து கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு வருகிற அக்டோபர் 8-ம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக தற்போது அறிவித்துள்ளார். அதாவது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 162 பேரையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட உள்ளனர். மேலும் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.