
குஜராத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஜூன் 12ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 நபர்களில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.
மேலும் விமானம் மருத்துவ விடுதியின் மீது மோதி வெடித்து சிதறியதால் மொத்தமாக பலி எண்ணிக்கை 274 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நரோடாவை சேர்ந்த மகேஷ் ஜிராவாலா என்ற இயக்குனர் விமான விபத்து நடந்த அன்று காணாமல் போய்விட்டதாக அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விபத்து நடந்த சமயம் தனது கணவர் லா கார்டன் பகுதியில் ஒருவரை சந்திக்க சென்றதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். தனது கணவரின் ஸ்கூட்டரும் மொபைல் போனும் காணவில்லை. அவரும் விபத்தில் சிக்கினாரா என்பதை சரி பார்க்க நாங்கள் டிஎன்ஏ மாதிரிகளை சமர்ப்பித்துள்ளோம் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.