சமூக வலைதளங்களில் ஒரு லைக்ஸ் மற்றும் வியூஸிற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ரீல்ஸ் மோகம், இன்று சாமானிய மனிதர்களின் உயிரோடு விளையாடும் நிலைக்குத் தள்ளியுள்ளது. ஆட்டோ ஒன்றின் கதவில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டு ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், எதிர்பாராத விதமாக அதே சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் மீது மோத, அந்த நபர் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் அந்த வாலிபர் காட்டிய அலட்சியமும், அதனால் பாதிக்கப்பட்ட நபரின் பரிதாப நிலையும் பார்ப்போரின் நெஞ்சை உறைய வைக்கிறது.
प्रयागराज के नैनी ब्रिज पर आप 1 घंटे खड़े रह जाएंगे तो ऐसे नमूने मिल जाएंगे।
इनके प्रति कोई सिंपैथी भी नहीं है अब। https://t.co/mJZvFJFe28
— Shivani Sahu (@askshivanisahu) June 28, 2026
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் அந்த வாலிபரின் பொறுப்பற்ற செயலுக்குக் கடும் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர். “லைக்ஸ் வாங்குவதற்காக மற்றவர்களின் உயிரைப் பணயம் வைப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று பலரும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுபோன்ற ஆபத்தான ரீல்ஸ் மோகத்தால் சாலையில் நடப்பவர்களுக்கும், வாகனம் ஓட்டுபவர்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதால், இத்தகைய நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
