நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது ஒரு முக்கியமான தனித்துவ அடையாள ஆவணமாகும். இந்த ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் ஆகிவிட்டால் அதனை கட்டாயமாக புதுப்பிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 14ஆம் தேதி வரை இருந்த நிலையில் ஆதார் மையங்களில் கூட்டம் அலை மோதியது. அதாவது ஆதார் அப்டேட் குறித்து போலியான செய்திகள் பரவியதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனால் ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளனர். அதன்படி மத்திய அரசு அடுத்த வருடம் ஜூன் மாதம் 14ஆம் தேதி வரை ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடித்துள்ளது. ஒவ்வொரு 10 வருடத்திற்கும் ஒரு முறையும் மக்கள் ஆதார் அட்டையை புதுப்பிப்பது அவசியம் என்பதால் இந்த வேலையை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்   ‌https:/myaadhaar.uidai.gov.in/என்ற இணையதள முகவரிக்குள் சென்று இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். இல்லையெனில் அருகில் உள்ள ஆதார் ‌ சேவை மையத்திற்கும் சென்றும் புதுப்பிக்கலாம்.