கடந்த வருடம் ஜூலை மாதம் மத்திய அரசின் புதிய சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்களை கொண்டு வர ஓய்வு பெற்ற நீதி அரசர் சத்யநாராயணன் தலைமையில் குழு அமைத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் 15 நாட்களில் புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை மக்கள் தெரிவிக்கலாம் என்று நீதி அரசர் சத்யநாராயணன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. கருத்துக்களை www.om-crl-laws2024.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.