பல்கலைக்கழக மானிய குழு பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு அல்லது நிலை நான்கில் ஒரு மாணவர் எந்த பாடப்பிரிவில் படித்திருந்தாலும் இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையிலும் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் தான் சேர விரும்பும் துறையில் தேசிய அளவிலான அல்லது பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வில் அந்த மாணவர் வெற்றி பெற வேண்டும்.
இளங்கலை பட்டப்படிப்பில் எந்த துறையிலும் படித்த ஒரு மாணவரும் சம்பந்தப்பட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்றால் முதுகலையில் எந்த துறையையும் தேர்ந்தெடுத்து படிக்க முடியும். அடுத்ததாக நிறுவனங்களின் கல்வி மற்றும் கட்டமைப்பு ஆகிய வசதிகளை பொறுத்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களை இளங்கலை இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, நான்காம் ஆண்டுகளில் நேரடி சேர்க்கை நடத்தலாம். முதுகலை பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம்.
இதனைத் தொடர்ந்து பாடத்திட்டம் மற்றும் கடன் கட்டமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவு நிறுவனம் மற்றும் கற்றல் முறை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு மாணவர் ஒரே நேரத்தில் இரண்டு இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்புகளை தொடரலாம் என புதிய விதி முறைகள் கூறுகிறது. யுஜிசி புதிய விதிமுறைகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெறுவதன் அடிப்படையில் மாணவர்கள் தங்கள் கடந்த கால பிரிவு தகுதியை பொருட்படுத்தாமல் எந்த ஒரு துறையிலும் சாதிக்கலாம். மேற்கூறிய சீர்திருத்தங்கள் மூலம் இந்திய உயர் கல்வி உலகளாவிய தரத்தை ஏற்றுவதை உறுதி செய்கிறோம் என பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.