இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை மீண்டும் உள்ளே கொண்டு வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூட்டணியின் முடிவில், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அதிரடியாகப் பேசிய ரவி சாஸ்திரி, இந்திய அணியின் இந்தத் திடீர் முடிவு தனக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியதோடு, உலகக்கோப்பையைவென்று கொடுத்தது, அந்தத் தொடரின் சிறந்த வீரராக ஜொலித்த சஞ்சு சாம்சன் போன்ற ஒரு உலகத்தரம் பிளேயர், கடினமான பிட்ச்கள் வாய்ந்த இரண்டு போட்டிகளில் சரியாக ஆடவில்லை என்பதற்காக எப்படி அணியை விட்டுத் தூக்கலாம் என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்றொரு பேச்சு, இன்றொரு முடிவு என அணியைத் தேர்வு செய்வதில் நிலவும் இந்தத் தொடர் குளறுபடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், சஞ்சு சாம்சனுக்கு இன்னும் நீண்ட வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கம்பீர் கூட்டணிக்குச் சாட்டையடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔴 ONE DAY VAIBHAV, NEXT DAY SANJU – RAVI SHASTRI QUESTIONS TEAM SELECTION 🤯
Ravi Shastri said🎙️: He was surprised by India’s decision to bring Sanju Samson back in place of Vaibhav Suryavanshi.
– He felt that a World Cup-winning player like Samson, who was Player of the… pic.twitter.com/tg5KBz3WGQ
— Sam (@cricsam02) July 11, 2026
“>
இங்கிலாந்திடம் தொடரை இழந்து தவிக்கும் வேளையில், ரவி சாஸ்திரியின் இந்த விமர்சனம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியது.
