திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் செலுத்த வேண்டிய வாடகை பாக்கி ரூ.54 லட்சத்தை வசூலிக்க உத்தரவிட கோரிய வழக்கில், ஒரு மாதத்திற்குள் வாடகை பாக்கி செலுத்த முடியமா? என நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் முழு விவரத்தை 22ம் தேதி தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். மனு குறித்து இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் தரப்பில் விரிவான பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.