தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும், குமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.