தமிழக மாணவரான அப்துல் ஷேக் என்பவர் தனது மருத்துவ படிப்பை முடித்து சீனாவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவிற்கு திரும்பிய அவர் கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி மீண்டும் சீனாவிற்கு திரும்பியுள்ளார். சீனாவில் 8 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு பின் அவர் வடகிழக்கு சீனாவின் ஹுலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கிகிஹார் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென அந்த மாணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியதால் அதிர்ச்சி அடைந்த  குடும்பத்தினர் மாணவரின் உடலை மீட்டு வர வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக அரசு உதவி செய்யுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.