நாம் தமிழர் கட்சி ஒரு பிரிவினைவாத இயக்கம். நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நானும் எனது குடும்பத்தாரும் இணையதள தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என திருச்சி எஸ்.பி அருண்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் திருச்சி எஸ்.பி வருண்குமார் மீது நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்தனர்.

சண்டிகரில் நடந்த ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் நாம் தமிழர் கட்சியினரால் தனது குடும்பத்தினர் இணையதள அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும், கட்சி கண்காணிக்கப்பட வேண்டியது எனவும் எஸ்.பி அருண்குமார் பேசினார். இதனால் அவர் மீது நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.