தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல்கொண்டா மாவட்டத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் ஒருவர் சக்கர நாற்காலியில் இருந்த தனது மாமனாரை காலணியால் கொடூரமாக தாக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

அந்த பெண் ஏன் அவரை தாக்கினார் என்பதற்கான காரணம் தெரியவில்லை. அந்த முதியவரை கை மற்றும் காலணியால் கொடூரமாக தாக்கியுள்ளார். அடிக்கும் போது அந்த முதியவர் கெஞ்சியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.