உலகின் முன்னணி நிறுவனங்களில் AI தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவு உள்ளது. மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை நடத்துகிறார். இவர் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் உள் வட்டாரங்களில் ஒரு நினைவூட்டலை வெளியிட்டுள்ளார்.

அதன் கொள்கைகளை சீரமைக்கும் ஒரு பணியாக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. பணி திறன் மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் வேலை பார்க்காத ஐந்து சதவீதம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கான போதிய இழப்பீடும் கொடுக்கப்படும் என மார்க் ஜூக்கர் பெர்க் உறுதி அளித்துள்ளார்.