ஆளில்லா லெவல் கிராசிங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர் ரயில் விபத்துக்கள் நிகழவில்லை என இந்தியன் ரயில்வே கூறியுள்ளது. இது குறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஜனவரி 1 2019-க்குள் இந்தியன் ரயில்வேயில் அகலப்பாதை நெட்வொர்க்கில் உள்ள அனைத்து ஆளில்லா லெவல் பயணிகள் ரயில் வழித்தடங்களில் இருந்து அகற்றப்பட்டது. அதேபோல் மீட்டர் கேஜ் மற்றும் நாரோ கேஜ் பிரிவுகளில் 751 ஆளில்லா லெவல் கிராசிங்குகள்  மட்டுமே உள்ளது. அந்த பிரிவுகளின் பாதை மாற்றத்தின் போது அவை அகற்ற திட்டமிட்டப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ரயில் விபத்துகளை குறைப்பதற்காக இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

அதிக ரயில்/சாலை, வாகன போக்குவரத்துடன் கூடிய லெவல் லெவல் கிராசிங்குகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக மனிதர்கள் அல்லது சிக்னல்களுடன் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. சாலை எச்சரிக்கை பலகைகள், வேகத்தடைகள், விசில் பலகைகள் போன்ற 11 crossing அடிப்படையில் கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அறிவுறுத்தல்கள் மற்றும் ஆய்வு இயக்கங்கள் அவ்வபோது தொடங்கப்பட்டு வருகிறது. மேலும் லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பாக செல்வதற்காக சாலை பயனாளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொது பிரச்சாரங்கள் பாதுகாப்பு முழக்கங்கள் மேற்கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.