உத்திரபிரதேச மாநிலத்தில் அம்ப்ரோஹாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் வண்டி ஓட்டிய இளைஞர்கள் குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், வெள்ளை நிற swift dezire காரில் இரண்டு இளைஞர்கள் காரின் கதவுகளில் சாய்ந்து மது அருந்தி  கொண்டே பயணிக்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து 2 ராயல் என்ஃபீல்டு மற்றும் 1 ஸ்ப்ளெண்டர் பைக்கள் வேகமாக சீறிப் பாய்கின்றன. அவர்களும் கைகளில் மது பாட்டில்களை ஏந்தியபடி நடுரோட்டில் சாகசம் செய்கின்றனர்.

இந்த ஆபத்தான செயல்முறையால் சாலையில் பயணித்த பயணிகள் மற்றும் பாதசாரிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக கண்காணிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோவை நெடுஞ்சாலையில் பயணித்த மற்றொரு வாகன ஓட்டியால் எடுக்கப்பட்டது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து திடௌலி கோட்வாலி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் வாகனம் ஓட்டிய இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.