
ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள சப்காலி கிராமத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும் அடிக்கடி உணவை தேடி அந்த கிராமத்திற்குள் நுழைவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் யானையின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஓட்டு வீட்டில் பன்னலால் கோர்வா(15), கஞ்சன் குமாரி(8), மற்றும் பேபி குமாரி (9) உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த விஷப்பாம்பு ஒன்று கடித்ததில் மூவருமே உயிரிழந்தனர் என சினியா காவல் நிலைய பொறுப்பாளர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக அந்த 3 குழந்தைகளும் யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பான இடங்களில் உறங்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். குழந்தைகள் மட்டுமின்றி அந்த கிராமமே பள்ளி கட்டடங்கள் அல்லது வேறு இடத்தில் மொத்தமாக தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் அங்குள்ள ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்படி தூங்க சென்ற போது இந்த உயிர் பலிகள் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. ஆகவே அரசு விரைந்து மக்களின் பாதுகாப்புக்கு உதவி செய்ய வேண்டி கேட்டுள்ளனர்.